Monday, September 24, 2012

திவ்ய ப்ரபந்தம்








ஆழ்வார்கள் காலம் தொட்டு இன்று வரை மனிதப்பிறவி எடுத்து உண்டிக்கும் ,உடைக்குமே மனிதன் அலைகிறான்.

எம்பெருமான் அரங்கனை எண்ணாமல் அலைந்தவர்கள் பேரின்பம் கண்டதும் இல்லை.அவர்தம் பெயரும் செயலும் நிலைத்து நின்றதும் இல்லை.



ஆழ்வார்கள் ஸ்ரீமந் நாராயணனையே பரம் பொருளாக வழிபட்டார்கள் அவனைப்பற்றிய அனுபவ அருளிச் செயல் பாசுரங்கள். எம்பெருமானின் கல்யாண குணங்களே இவற்றின் பாடுபொருள்கள் ஆகும்.
பகவத் பக்தி, பாகவ பக்தி, ஆசார்ய பக்தி ஆகிய மூன்றினையும் பற்றி ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள்.

''முதலாயிரம் ''
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதல் பகுதியாக உள்ளது.
இதில் 947 பாசுரங்கள் உள்ளன.

பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு பொங்கும் பரிவாலே புறப்பட்ட மங்களா சாசனம் ஆகும். அவருடைய திருமொழியில் ஆழ்வார் கண்ணனின் மேன்மைகளைத் தாயான நிலையில் அனுபவிக்கிறார்.
 ஆண்டாளின் திருப்பாவை வேதம் அனைத்துக்கும் வித்தாக , கைங்கர்யத்தை வலியுறுத்தும் நோன்புப் பாடலாக மிளிர்கிறது.நாச்சியார் திருமொழியில் ஆண்டாளின் தெய்வக் காதல் பள்ளமடையாய்ப் பாய்கிறது.
 குலசேகர் தம் திருமொழியில் ,தாம் அரங்கன் ,திருவேங்கடவன் ஆகியோரிடத்தே கொண்ட அடிமைத் திறம் பற்றிப் பாடியதுடன்,கண்ணன் , ராமனிடத்தே ஈடுபடுகிறார்..
 திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தம் வேத வேதாந்தக் கருத்துக்களை உள்ளடக்கி நாராயணனின் பரத்துவத்தை நிறுவுகிறது.
 திருப்பாணாழ்வார் ,அரங்கனின் அர்ச்சைத் திருமேனி அழகில் ஈடுபடுகிறார்.
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலை தொண்டின் மேன்மையையும் திருநாமப் பெருமையையும் வெளிப்படுத்துகிறது.
மதுரகவி ஆழ்வார் ஆசார்ய பக்தியைத் தலைக் கட்டுகிறார்.
     










No comments:

Post a Comment